கடலூர், மார்ச் 3- பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற மாணவி யின் மருத்துவச் செலவை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள எருமனூரில் விஇடி தனியார் பள்ளி யில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த, அதே ஊரைச் சேர்ந்த மாணவி ஒரு வருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக விலங்கியல் ஆசிரியர் சுவாமிநாதன் என்பவர் வாட்ஸ்அப் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 1ஆம் தேதி பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருடைய கால்கள், முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாணவியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்னர். இதையடுத்து விருத்தாசலம் கோட்டாட்சியரை சந்தித்து, விஐடி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலி யல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுவாமிநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ செலவினை பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும், அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆர்.கலைச்செல்வன், திட்டக்குடி வட்டச் செயலாளர் அன்பழகன், மாதர் சங்க வட்டச் செயலாளர் அன்புச்செல்வி, வட்டக் குழு உறுப்பினர் நெல்சன், மாணிக்கவேல், மார்க்கெட் சேகர், சத்தியா ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்நிலையில் காவல்துறை யினர் பாலியல் தொல்லைக்கு காரணமான ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.