districts

img

அண்ணாமலை பல்கலையில் மாணவர் சேர்க்கை உதவி மையம்

சிதம்பரம், ஜூலை 14- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டிருக்கும் உதவி மையத்தை துணை வேந்தர் இராம.கதிரேசன் திறந்து வைத்தார். பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத், துணை வேந்தரரின் தனி செயலர்  பாக்கிய ராஜ், பல்வேறு துறைகளின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் மாணிக்கம், துணை இயக்குநர் பால பாஸ்கர் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும், மின்னணு விண்ணப்படங் களைப் பூர்த்தி செய்யவும், மின்னணு பண பரிவர்த்தனைகளில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பும் மாண வர்கள் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 8 ஆகும்.