districts

img

பாழடைந்த கிணறு சீரமைப்பு

சிதம்பரம், நவ.9- பரங்கிப்பேட்டையில் பாழ டைந்த கிணறு சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பரங்கிப்பேட்டை தியாகத் தெருவில் கடந்த 50 ஆண்டு களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணறு பழுதடைந்து 10 ஆண்டுகளை கடந்தும் சீரமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்தனர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று தூர்வாரி புதுப்பித்த  கிணற்றை பேரூராட்சித் தலைவர் தேன்மொழி சங்கர் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் முகமது யூனஸ், வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் விஜய், நகரச் செயலாளர் வேல்முருகன், ஜாபர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.