districts

img

மாற்று இடம் கேட்டு இருளர் இன மக்கள் மனு

சிதம்பரம்,  நவ 11- சேத்தியாதோப்பு பகுதி யில் வசிக்கும் இருளர் சமூக மக்களுக்கு மாற்று இடம் கேட்டு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் சிதம்பரம் சாராட்சியரிடம் மனு அளித்தனர். சிதம்பரம் அருகே கீரப்பாளை யம் ஒன்றியத்திற்குட்பட்டது பூதங்குடி ஊராட்சிமன்றம். இங்குள்ள கட்டுகரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அனைவருக்கும் வாக்காளர், ஆதார், குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வயல்களில் எலி, பாம்பு பிடிப்பது, கரும்பு வெட்டுவது, மூட்டை தூக்குவது, உள்ளிட்ட கூலி வேலைகளை செய்து வரும் இந்த மக்கள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்களது குழந்தை களை கல்வி படிக்க வைத்து வருகின்றனர்.  இந்நிலையில், இருளர் இன மக்களின் குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்றும் சிதம்பரம் அருகே கடற்கரை பகுதியில் மாற்று இடம் வழங்குவதாகவும் வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர். ஆனால், இந்த மக்கள் தற்போது வசித்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள சேத்தியாதோப்பில் மாற்று இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் நெடுஞ்சேரலாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.