சிதம்பரம், டிச. 28- சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட வேங்கான் தெருவிலுள்ள குரு நமச்சிவாய கோயிலைச் சுற்றி 24 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருந்து வரும் இடம் ஆக்கிரமிப்பு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்ற 24 குடியிருப்புகளை யும் காலி செய்து 30 நாட்களுக்குள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க காலக்கெடு விதித்து ஒரு மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற தீர்பின்படி அங்கு குடியிருப்பவர்களுக்கு வீடு களைக் காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நீதிமன்ற காலக்கேடு புதன் கிழமையோடு (டிச.28) முடி வடைந்ததையெடுத்து வீடுகளைப் பூட்டி சீல் வைப்பதற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன், அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு வந்தனர் அப்போது குடியிருப்பு வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதி காரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சின்னையன், மல்லிகா, சித்ரா, காங்கிரஸ், திமுகவினர் பொது பாதிக்கும் மக்களுக்கு ஆதர வாகக் குரல் எழுப்பினர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ரகு என்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பெண் ஒருவர் மண்ணென்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அங்கு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பிறகு, ஜனவரி 7 ஆம் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்து கொள்ளுவதாக எழுதிக்கொ டுத்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.