districts

img

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்,மே.8- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் விடுபட்ட ஏஎம்சி, நான்-ஏஎம்சி, அவுட்சோர்சிங் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களையும் முன்னுரிமைப் பட்டியலில் இணைத்து மருத்துவப் புத்தகம் வழங்க வேண்டும், புதிதாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட அனைவருக்கும் ஊதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இன்கோசர்வ், ஹவுசி கோஸ், ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே சம்பள முறையை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு காண்ட்ராக்ட் தொழிற் சங்கத்தினர் நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஒப்பந்தத் தொழிலாளர் கள் சங்கப் பொருளாளர் என்.சண்முகம் தலைமை வகித்தார்.  சுரங்கம் 1ஏ பகுதிச் செயலர் ஏ.ராயப்பன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் டி.அமிர்தலிங்கம், சிஐடியு பொதுச் செயலர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனுவாசன், துணைத் தலைவர் ஏ.வேல்முருகன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  இதே கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் 25-ஆம் தேதி பெரியார் சதுக் கத்திலிருந்து தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்தப்படும் எனவும் தலைவர்கள் அறிவித்தனர்.