districts

img

பேரூராட்சித் தலைவரான இருளர் இன சமூக பெண்!

சிதம்பரம், மார் 5- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் கிள்ளை பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி  தேர்தலில் கிள்ளி பேரூராட்சியில் திமுக மொத்தம் 9 வார்டுகளிலும், காங் 3, விசிக 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 2 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது.  இந்த பேரூராட்சி மன்ற  தலைவர் பழங்குடியின பெண்ணுக்கு ஒதுக்கப் பட்டது. திமுக சார்பில் வெற்றி  பெற்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த 10-வது வார்டு கவுன் சிலர் மல்லிகா தலைவர் வேட் பாளராக திமுக கூட்டணி அறிவித்தது. அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மல்லிகா கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண் பேரூராட்சி மன்றத்  தலைவராக முதல் முறை யாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கடலூர் மாவட்ட உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருளர் சமூகத்திலிருந்து தலைவர்  உள்ளிட்ட எந்தப்  பதவிகளுக்கும் இதுவரைக் கும் ஒருவரும் வந்த தில்லை. தற்போது கிள்ளை  பேரூராட்சியில் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் தலைவராகப் பதவி ஏற்றுள்ளார்.  துணை தலைவர் பதவிக் கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 6 வது வார்டு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் போட்டி யின்றி வெற்றி பெற்றார்.