districts

கடலூரில் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி: சிபிஎம் கண்டனம்

கடலூர், நவ.22- கடலூரில் கலவரத்தை உருவாக்கும் பாஜகவின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட சிஐடியு அலுவலகம் லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில தென்னிந்திய முதல் கம்யூனிஸ்ட் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் திருவுருவ சிலை 2011இல் சிங்கார வேலர் அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதை திறந்து வைத்தார். இந்நிலையில் திங்களன்று (நவ. 21 காலை சிஐடியு நிர்வாகிகளிடம் அனு மதி பெறாமல், 20க்கும் மேற்பட்ட பாஜகவி னர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணி வித்துள்ளனர். மேலும் பாரத் மாதாகி ஜெ என முழக்கங்கமிட்டுள்ளனர். சிங்காரவேலர் முகத்தில் சந்தனம் மற்றும் குங்குமத்தை பூசி பொட்டு வைத்துள்ள னர். கடவுள் மறுப்பு மற்றும் மூடநம்பிக் கைக்கு எதிராக முழக்கமிட்ட சிங்கார வேலரை அவமானப்படுத்தும் வகையில் இச்செயல் அமைந்துள்ளது. இதுகுறித்து திருப்பாப்புலியூர் உதவி ஆய்வாளர் கண பதியிடம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை யினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் மாவட்ட துணை கூடுதல் கண்காணிப்பாளர் அசோகன், துணை கண்காணிப்பாளர் கரிகாலன் பாரி சங்கர் ஆகியோரிடம் செவ்வாயன்று (நவ. 22) மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளோம். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் பாஜக கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. இதை வன்மையாக கண்டிப்ப தோடு, காவல் துறை விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.