சிதம்பரம், மார்ச் 2- சி.கொத்தங்குடி ஊராட்சி மன்றம் பாரதிநகரில் 50 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வரும் கிராமமக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்டம், சி.கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்சா வேணு கோபால் தலைமையில் பாரதி நகரில் வசிக்கும் 23 குடும்பங்களை சார்ந்தவர்கள் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமனை சந்தித்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தவாது:- சிதம்பரம் அருகே உள்ளது கொத்தங்குடி ஊராட்சி மன்றம். இங்குள்ள பாரதி நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலி தொழி லாளர்கள். எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வீடடுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர் சுவேதா சுமன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். சி.கொத்தங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய பிச்சாவரம் கூட்டு றவு சங்கத் தலைவர் வேணு கோபால், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரேமா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.