திண்டுக்கல்,அக்.6- இந்த மாதம் முதல் ரேசன் கடைகளில் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரி வித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மலைகிராமமான வடகாடு ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் கோட்டைவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அக் டோபர் 6 அன்று நடை பெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெ.திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசிய தாவது:
தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடு களை கட்டி வழங்கும் வகை யில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட வுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன.
தமிழகத்திற்கு மாதம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்படு கிறது. அதை 25 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்தி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதன் பயனாக தற்போது 17,100 மெட்ரிக் டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை ரேசன் விலைக் கடைகளுக்கு வந்து சேரும்.
இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆத்தூர் மற்றும் ஒட்டன் சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவ சாயிகள், மாணவ, மாண விகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.