தருமபுரி, ஏப்.8- பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக தருமபுரிக்கு மின்சார ரயில் வெள்ளியன்று துவங்கப்பட்டது. இதனால் ரயில் பயணி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 1906 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தருமபுரி ரயில் நிலையத்தின் வழியாக தினந்தோறும் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தென் தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந் திரா மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தரும புரி ரயில் நிலையத்தில் நின்று செல்கின் றன. தருமபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, ஓசூர் போன்ற ஊர்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணி களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஓமலூர் முதல் பெங்களூரு மின்சார பாதை திட்டம் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பெங்களுரூ - ஓசூர் இடையே மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதன்தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெங்களூரு - ஓசூருக்கு இடையே மின் சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இரண் டாம் கட்டமாக மின் வழித்தடம் அமைக் கும் பணி தருமபுரி வரை நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டமும் நிகழ்த்தப் பட்டது. இந்நிலையில், சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதன் அடிப்படையில், பெங்களூரு - ஓசூர் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் (06577) சேவை ஏப்.8 ஆம் தேதி முதல் தருமபுரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வா கம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளி யன்று காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், ஓசூர், வழியாக காலை 10.45 மணிக்கு தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.