அறந்தாங்கி, ஜூன் 22 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழக அரசால் மாநில அளவில் நடத்தப்பட்ட யோகாசனப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கிராம கல்வி குழு தலைவர் ரவி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். யோகசனத்தின் சிறப்புகள் பற்றி ஆசிரியை மீனாட்சி மற்றும் பயிற்சியாளர் மனோகர் கூறினர். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்று பேசினார். நிறைவாக ஆசிரியை நித்யா நன்றி கூறினார்.