districts

பசியில் வாடும் நெசவாளர்கள் நிவாரணத்திற்காக ஏங்கும் துயரம்

வீட்டில் இருந்தபடியே செய்யும் நெசவு தொழிலுக்கான மூலப் பொருட்கள் பல மாநிலங்களில் இருந்து வரவேண்டும். பாவு நூல் ஆந்திராவிலிருந்தும், பாலிஸ்டர் நூல்  கர்நாடகாவிலிருந்தும், ஜரிகை பொருட்கள் குஜ ராத்திலிருந்தும் வர வேண்டியுள்ளது. ஊரடங்கு காரணத்தால் மூலப் பொருட்கள் வர முடியாத நிலையில் கைத்தறி நெசவு தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்பத்தில் உள்ள வர்களின் மூன்று வேளை உணவைக்கும் அரசு  உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நெசவாளர்கள்  எதிர்பார்க்கின்றனர். நெசவு தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின்  மூலம் தமிழக அரசு நிவாரணத்தை அறிவித்துள்  ளது. ஆனால், அந்த வாரியம் கட்டுமான தொழி லில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே செயல்படு கிறது. கைத்தறி, தையல் கலைஞர்கள், மண் பாண்டம் செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், சுமைப்பணி, சாலையோர சிறு கடை வியாபாரி கள் உட்பட 17-வகையான முறைசாரா தொழிலா ளர்களுக்கான நல வாரியங்கள் பெருமளவு இயங்காத நிலையில் உள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தும் பெரும்பாலானோருக்கு எந்த நிவாரணமும் கிட்டவில்லை என்று நெசவாளர்கள் வேதனை தெரிவித்தனர். ஒருசில பகுதிகளில் வங்கி கணக்கு இல்லாத  தொழிலாளர்கள், தங்களின் மனைவி அல்லது  பிள்ளைகளின் வங்கிக் கணக்கை அளித்துள்ள னர். அவற்றை ஏற்க வாரிய அதிகாரி மறுத்துள்ள னர். “வங்கி கணக்கு இல்லாத தொழிலாளர்க ளுக்கு வாரிய அடையாள அட்டையை அடிப்படை யாகக் கொண்டு வாரியம் அல்லது கிராம நிர்வாக  அதிகாரி வாயிலாக நிவாரணத்தை வழங்க வேண்டும்” என்று திருவள்ளூர் மாவட்ட கைத்தறி  நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் கே.சந்தரையா வலியுறுத்தி உள்ளார். ஆரணியில் 500-கும் மேற்பட்டவர்கள் கைத்தறி  நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நெச வாளர்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. வீட்டு  வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை செலுத்த  முடியாத சூழ்நிலையில் உள்ளனர். வாழ்வாதாரம் இழந்து குடும்பத்துடன் தவிக்கின்றனர். இவர்க ளின் பசியை போக்க அரசு உடனடியாக நிவாரணப்  பொருட்களை வழங்க வேண்டும்

. -பெ.ரூபன்