districts

img

சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு

கோவை, அக்.16- சிறுவாணி அணையின் நீர்மட் டம் 43.49 அடியாக உயர்ந்து உள்ள தால், அணைக்கு வரும் தண்ணீரின்  அளவை தமிழகம் மற்றம் கேரளம் அதிகாரிகள் கண்காணித்து வரு கின்றனர். கேரளாவின் பாலக்காடு மாவட் டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை  கோவை மாவட்டத்தின் முக்கிய  குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக  உள்ளது. கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை  என்பது 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீராக உள்ளது. இதில், 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதி யில் மழை தொடர்ந்து பெய்து வருகி றது. இதனால், அணைக்கு வரும்  தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக  உயர்ந்தது. அணையின் நீர் பிடிப்பு  பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடி வாரத்தில் 14 மில்லி மீட்டர் மழை யும் பெய்தது. அணையில் இருந்து  9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர்  எடுக்கப்பட்டது. தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து  வருவதால் அணைக்கு வரும்  தண்ணீரின் அளவை தமிழக - கேர ளம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.