districts

img

சிபிஎம் ஈரோடு மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

ஈரோடு, அக். 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் அந்தியூரில் செவ்வாயன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 13 ஆவது மாநாடு நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள்,  அந்தியூரில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் அந்தியூர் தாலுகா கமிட்டியின் உறுப்பினர்  எஸ்.செபாஸ்டியன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில்,  வரவேற்புக் குழுவின் தலைவராக எஸ்.வி.மாரிமுத்து, செயலா ளராக ஏ.கே.பழனிச்சாமி, பொருளாளராக ஆர்.கந்தசாமி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புரவலர்களாக ஏ.கே. செல்வராஜ், எல்.பரமேஸ்வரன், எம்.நந்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இக்கூட்டத்தில், அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர். முருகேசன் மற்றும் தாலுகாக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.