அனைத்துத் தொழிலாளர்களுக்கும், கடந்தாண்டைவிட நியாயமான கூடுதல் போனஸ் வழங்கக் கோரி தாராபுரத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் கே.பொன்னுசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என்.கனகராஜ், ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவர் மேகவர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.