districts

img

முறைகேடாக பதவி உயர்வு: சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, அக்.17- முறைகேடாக பதவி உயர்வு வழங்க காரணமான முதன்மை இயக்குநர் மீது தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி பொள்ளாச்சியில் சாலைப் பணியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில், பொள்ளாச்சி கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை  கைவிட வேண்டும். சாலைப்பணியா ளர்களின் முதுநிலைப்பட்டியல் முறைகேடாக வெளியிட்டு, முறை கேடான பதவி உயர்வு வழங்க காரண மான முதன்மை இயக்குனர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, கோட் டத் தலைவர் எம்.வெற்றிவேல் தலைமை வகித்தார். கோட்டச் செய லாளர் எஸ்.ஜெகநாதன் கோரிக்கை களை விளக்கி பேசினார். கோட்டப் பொருளாளர் வி.சின்னமாரிமுத்து நன்றி கூறினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.