districts

img

கோவை: காவல் நிலையம் முன்பு நின்று reels பதிவிட்ட இளைஞர் கைது!

கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு நின்று கெத்தாக  reels பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை,  செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கோவை செல்வபுரம் காவல் நிலையம் மற்றும் அந்த பகுதியின் பலவேறு இடங்கள் முன்பு கெத்தாக நின்று ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில்  பதிவிட்டார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்து அவரை கைது செய்தனர். அவர் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், மின்னணு முறையில் தவறான தகவல்களைப் பரப்புதல், இருகுழுக்கள் இடையே பகை உணர்வைத் தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்..