“சுற்றிலும் தென்னந்தோப்புக ளும், வயல்வெளிகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும்” பகுதியாக கோவை மாவட் டம், பொள்ளாச்சி உள்ளது. அங்கு வீசக் கூடிய தென்றல் தவழக்கூடிய காற்றினை யும், இயற்கை அழகு நிறைந்த பகுதியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் சுற் றுலா பயணிகளை மகிழ்விக்கும் வித மாகவும், உள்ளூர் பொதுமக்களை கவ ரும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் தனியார் அமைப்பு சார்பில் பலூன் திரு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவில் பல்வேறு நாடு களை சேர்ந்தவர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை மேற்கொள்கின்றனர். இது பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
ஜன.13ல் துவக்கம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத் தப்படாமல் இருந்தது. இதனால் பலூன் திருவிழாவை மக்கள் ரசிக்க முடியாமல் இருந்தனர். இந்த ஆண்டு பலூன் திரு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வந்த பலூன் திருவிழாவை முதல் முறையாக தமி ழக அரசின் சுற்றுலாத்துறை இணைந்து நடத்த உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டி யில் ஜனவரி 13 ஆம் தேதியன்று தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா நடக்க உள்ளது. பலூன் திருவிழா நடக்க உள்ள இடம் அதிகமான காற்று வீசக்கூடிய இடமாகும். இதனால் பலூன்கள் பறப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஜனவரி 13 ஆம் தேதியன்று தொடங்கும் இந்த திருவிழாவில் நெதர்லாந்து, வியட் நாம், ஸ்பெயின், அமெரிக்கா உட்பட 9 நாடு களிலிருந்து பலூன்கள் கொண்டு வரப் பட்டு பங்கேற்க உள்ளன.
குழந்தைகளை கவர...
3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா வில் ஒவ்வொரு நாளும் மக்களை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. குழந் தைகளை கவருவதற்காக பல்வேறு வித மான விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட உள்ளது. பொள்ளாச்சியில் நடை பெறும் பலூன் திருவிழாவை காண்பதற் காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களி லும் இருந்து மக்கள் வருவார்கள். தற் போது பலூன் திருவிழாவிற்கான ஏற்பாடு களை அரசுடன் இணைந்து தனியார் அமைப்பு செய்து வருகிறது. பலூன் திரு விழாவில் உணவு உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகளும் அமைக்கப்படுகி றது. தற்போது அந்த பணிகளும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டவர்கள் பங்கேற்பு
இதுகுறித்து பலூன் திருவிழாவை அரசு டன் இணைந்து நடத்த உள்ள தனியார் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகை யில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் ஜன.13 ஆம் தேதி 15 ஆம் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா 8 ஆவது ஆண்டாக நடக்க உள்ளது. பலூன் திருவிழாவானது ஜன.12 ஆம் தேதியே ஆரம்பமாகி விடுகிறது. ஜன.13 ஆம் தேதி முறைப்படி திருவிழா தொடங்குகிறது. இதில், 9 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பலூன் திருவிழாவில் கனடாவை சேர்ந்த ப்ளூ பியர், பெல்ஜியத்தை சேர்ந்த ஸ்மர்ப், பிரேசிலை சேர்ந்த டினோ என 3 தனித்துவ மான பலூன்களும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்க உள்ளன. குறிப்பிடத்க்க அம்ச மாக நெதர்லாந்து பலூனை பெண் விமானி யான டிரிண்ட்ஸ்ஜே ஆப்ரிங்கா பறக்க விட உள்ளார். இவ்விழாவில் மக்களை மகிழ்விக்கும் விதமாக முதல் நாளில் (ஜன.13) தைக்குடம் பிரிட்ஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 2 ஆவது நாளாக (ஜன.14) ராஜேஷ் வைத்யா வின் ப்யூசன் நிகழ்ச்சி, நித்யா வெங்கட்ரா மன், ஆதித்யா ஆர்.கே உள்ளிட்ட பின் னணி பாடகர்களும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. இதுதவிர குழந்தைகளுக்கு பிடித்த, அவர்கள் விளை யாடி மகிழும் பல்வேறு வகையான விளை யாட்டு போட்டிகளும் பலூன் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றனர். -கே.எஸ்.எம்.