districts

img

இ-பாஸ் கிடைக்காததால் சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு பயணித்த இளைஞர்

அவிநாசி ஆக.5- இ-பாஸ் கிடைக்காத தால் சாலை மார்க்கமாக சொந்த ஊருக்குச் சென்ற இளைஞரை அவிநாசி சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தி லாரி மூலம் செல்ல ஏற்பாடு செய்தனர்.

வேலூர் மாவட்டம், மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சரத்குமார்(36).  இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தருமபுரி மாவட்டம் நங்கம்பள்ளியில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், கோவாவில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த இவர்  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது பணி தடைபட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

 இதையடுத்து இ-பாஸ் கிடைக்காமல், கடந்த மாதம் 25ம் தேதி நடந்தே புறப்பட்டு சுமார் 150 கிலோமீட்டர் தூரமும், அவ்வப் போது லிப்ட் கேட்டும் அவிநாசி பைபாஸ் சாலை வரை வந் துள்ளார்.   இதனையறிந்த அவிநாசி பேரூராட்சி சுகாதாரத் துறையினர் இளைஞரை தெக்கலூர் அருகில் உள்ள காவல்  சோதனைச் சாவடியில் ஒப்படைத்து உரிய பாதுகாப்புடன் லாரியில் பயணிக்க ஏற்பாடு செய்தனர்.