சென்னை, ஜூலை 27- பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களிடம் சதுரங்கப் போட்டி குறித்த ஆர்வத்தை உருவாக்குவதற்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவர்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை சார் பில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப் பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப் படும். இத்திட்டம் ரூ. 1 கோடியில் செயல்படுத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்று அறிவித்திருந்தார். இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க, நடு நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் களுக்கு பயிற்றுநரைக் கொண்டு மாவட்ட அளவில் சதுரங்க விளையாட்டில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத் தும் விதமாக 100 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லவும், விமானத்தினுள் சிறப்பு சதுரங்கப் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்ல உள்ள சிறப்பு விமானத்தினை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.