districts

வெள்ளைப்புலி உயிரிழப்பு

வண்டலூர், மார்ச் 24- வண்டலூர்  உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி புதனன்று திடீரென உயிரி ழந்து. சென்னை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் சுமார்  2400 விலங்குகள் பராமரிக் கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 13 வயதுடைய வெள்ளை புலிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ  குழுவினர் பரிசோதித்த போது வெள்ளை புலிக்கு அட்டாக்ஸியா நோய் பாதிப்பு இருப்பது தெரிந் தது. இதையடுத்து வெள்ளை புலியை தனியாக கூண்டுக் குள் வைத்து கடந்த 2 வாரத் துக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தனர். இதற் கிடையே உணவு சாப்பிட  முடியாமலும், அதன்  கால்களின் செயல்பாடு களும் முழுமையாக முடங்கின. இதனால் வெள்ளை புலியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் புதனன்று  இரவு 9 மணியளவில் வெள்ளைப் புலி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து பூங்கா வில் உள்ள மற்ற விலங்குக ளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று பூங்கா ஊழி யர்கள் கண்காணித்து வரு கின்றனர்.