சென்னை, மார்ச் 9- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள தாவது;- கடந்தாண்டு மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தில் உள்ள மொத்தத் தொகை ரூ.6 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரத்து 474 என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் வழக்கமான மற்றும் அத்தியாவசிய நடவடிக் கைகளுக்கு குறைந்தபட்ச மாதச் செலவு ரூ.128 லட்சம் ஆகும். எனவே, இந்த சிறப்பு நிதியை தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணை யத்தின் கணக்கில் டெபாசிட் செய்யும் வகையில், உயிரியல் பூங்காவை முறையாக செயல்படுத்த, அத்தியாவசியப் பொருட் களை சமர்ப்பிப்பதற்கான செலவினங் களுக்காக, 7 கோடி ரூபாயை உடனடியாக வழங்குமாறு, முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.