சென்னை, ஏப்.25- பிரிட்டனில் கால்பந் தாட்டத்திற்கு புகழ்பெற்ற மான்செஸ்டர் நகருக்கு பயணம் செய்ய சென் னையை சேர்ந்த இளம் வீரர் பிரியரஞ்சன் உள்பட நான்கு பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 4 வீரர்களுடன் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் ஜாம்பவான்கள் பங்கேற்ற ஐவர் கால்பந்து இறுதிப் போட்டி (யுனைடெட் வி பிளே பைனல்) சென்னை பெரம்பூ ரில் உள்ள ஸ்ரீராம் சர்வதேச பள்ளி வளாகத்தில் (பழைய பின்னி ஆலை) ஞாயிறன்று (ஏப். 24) நடைபெற்றது. அப்போலோ டயர்ஸ், யுனைடெட் வி பிளே என்ற பெயரில் நடத்தி வரும் கால்பந்தாட்ட போட்டியின் இரண்டாவது சீசன் வெற்றிக ரமாக நிறைவடைந்தது. உலகில் புகழ்பெற்ற கால்பந்தாட்ட கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் – ஒத்துழைப்போடு இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா முழுவதிலுமிருந்து ஆர்வமும், திறனும் மிக்க 5000 – க்கும் அதிகமான இளம் கால்பந்தாட்ட வீரர்கள் இந்நிகழ்வின் இரண்டாவது சீசனில் உற்சாகத்தோடு பங்கேற்றனர். அவர்களில் பிரியரஞ்சன்(சென்னை), பெட்ரிக் குருபா (மேகாலயா) ரோனால்டுசிங் (சண்டிகர்) குணால் (புனே) ஆகிய நான்கு சிறார்கள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். அவர்கள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப்பின் பிரபல ஜாம்ப வான்களான பீட்டர் ஸ்மிச் செல், நெமஞ்சா விடிக், மைக்கேல் சில்வெஸ்ட்ரே, லூயிஸ் சாஹா, குயின்டன் பார்ச்சூன், வெஸ் பிரவுன் மற்றும் ரோனி ஜான்சன் ஆகி யோருடன் இறுதிப்போட் டியில் விளையாடினர். இறுதிப்போட்டி விறுவிறுப் பாக நடைபெற்றது.