districts

மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்த கணவன் கைது

ஊத்துக்கோட்டை, பிப்.27 ஊத்துக்கோட்டை அருகே நடத்தையில் ஏற்பட்ட தகராறில் மனையை உயிருடன் தீ வைத்து எரித்த கணவனை காவல்துறையினர்  கைது செய்தனர். ஊத்துக் கோட்டை அருகே உள்ள கம்மவார் பாளையம் பஸ் ஸ்டாண்ட் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவரது மனைவி பிரசன்னா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரசன்னா நடத்தை மீது சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் மனைவி பிரசன்னா உடலின் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தி னர் உடல் கருகிய பிர சன்னாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிர சன்னாவின் தந்தை சுப்ரமணி பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சுரேஷை கைது செய்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்.