districts

img

பள்ளி மேற்கூரை  சரிந்து சிறுவன் காயம்

திருத்தனி, ஏப். 2 - அங்கன்வாடியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்தான். திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். நண்பகல் நேரத்தில் திடீரென அங்கன்வாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் விமல்ராஜ் (வயது 5) என்று குழந்தை காயம் அடைந்தது உணவு இடைவேளை நேரம் என்பதால் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு வெளியே சென்றிருந்தனர். சிறுவன் விமல்ராஜ் மட்டும் பள்ளியின் உள்ளே இருந்துள்ளான். இதனையடுத்து விமல்ராஜனுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.