சென்னை, ஏப். 8 - பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் மீண்டும் நடிகர் எஸ்.வி.சேகர் மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு மோசமான கருத்தை பகிர்ந்தார். பெரும் சர்ச்சையானதையடுத்து அந்த பதிவை அவர் நீக்கினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பதிவுகளை நீக்கி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுள்ளேன். தேவையென்றால் மீண்டும் ஒருமுறை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதன்படி, தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தர விட்டனர். இந்த வழக்கை ஏப்.18ந் தேதிக்கு ஒத்தி வைத்த னர்.