திருத்தணி, மார்ச் 22- திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலையா? தற்கொலையா ? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். . திருத்தணி அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தோனீஸ்வரன் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்று படித்து வந்த அவர் ஆர்எஸ் மங்காபுரம் கிராமத்தை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மாணவன் தோனீஸ் வரன் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தோனீ ஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரத் தில் இளைஞர் அடித்துக் கொலை செய்ய ப்பட்டாரா அல்லது காதல் தோல்வியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகி ன்றனர். மாணவர் தோனீஸ்வரன் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் அவரது அம்மா மற்றும் இளம்பெண்ணின் அண்ணன் ஆகிய 3 பேரிடமும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.