சென்னை, ஏப். 16 - சென்னையில் சாலை விதிகளை மீறி சென்ற உணவு விநியோக ஊழியர்கள் மீது காவல் துறையினர் 365 வழக்குகளை பதிவு செய்தனர். சென்னை பெருநகரில் ஏராளமான மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோக சேவை கள் (ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை) செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை அதி கரித்து வருவதுடன், உணவு விநியோக பணி யாளர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன் விதி முறைகளின் காரணமாக, பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் மீறல், எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வேகமாக செல்லுதல் போன்றவற்றில் ஈடு படுகின்றனர். விரைவாக விநியோகம் செய்வதின் மூலம், விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த விதிமீறல்களை குறைக்கும் வகையில், மார்ச் 30 அன்று சிறப்பு வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது. அப்போது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனை யடுத்து சாலை விதிகளை மீறியவர்களின் விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவை தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறு வனங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஏப். 15 அன்றும் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.