கடலூர், ஜூலை 22- கடலூர் மாவட்டம் விருத் தாசலம் அருகே உள்ள சிறு வரப்பூர் சேர்ந்தவர் ஐஸ் வர்யா (28). விருத்தாசலத் தில் உள்ள தனியார் நிதி நிறு வனத்தில் கணவர் அருள் தனது வீட்டு பத்திரத்தை அட மானம் வைத்து ரூ.2 லடசம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாத தவணை யாக ரூ.4,900 செலுத்தி வந் துள்ளார். கடந்த இரண்டு மாத மாக போதுமான வருமானம் இல்லாததால் தவணையை கட்டவில்லை, கடந்த செவ் வாயன்று தவணை கேட்ப தற்கு வீட்டிற்குச் சென்ற ஊழி யர்கள் அங்கிருந்த அருளின் குழந்தைகளை வெளியே தள்ளி வீட்டை பூட்டி சீல் வைத்தனராம். அச்சமயம் வீடு திரும்பிய ஐஸ்வர்யா இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர் தூக்கிட்டு தற் கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டதோடு, நிதி நிறுவனத்தின் நடவடிக் கையை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அருள் கம்மாபுரம் காவல் நிலை யத்தில் புகார் கொடுக்கப் பட்டது. புகாரின் பேரில், காவல்துறையினர் ஸ்டார் பைனான்ஸ் தனியார் நிறு வன ஊழியர்கள் தைவ்பி யாஸ், சரவணன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.