districts

img

மழைநீர் வடிகால் பணிகள்: 2ஆவது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை, அக். 30- சென்னை பள்ளி கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செய லாளர் இறையன்பு அதி காரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை சனிக்கிழமை துவங்கிய நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான பள்ளி கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் செம்மஞ் சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட மழைநீரால் அதி கம் பாதிக்கப்பட்ட பகுதி யில் அகல மூடுகால்வாய் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் மீண்டும் இந்த பகுதிகளை மூன்றாவது முறையாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இறையன்பு ஞாயிற்றுக் கிழமை (அக். 30) பள்ளிகரணை, மடிப் பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நடை பெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணி களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பல்லாவரம் - துரைப் பாக்கம் ரேடியல் சாலையில் நடைபெற்று வரும் அகல மூடுகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டு கால்வாய்கள் அமையும் இடத்தை வரைபடம் மூலம் பார்த்து அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.