districts

img

அடிக்கடி தோண்டப்படும் பள்ளத்தால் மக்கள் அவதி

சென்னை, பிப். 2 - மதுரவாயல் பல்லவன் நகர் பிரதான சாலை அடிக்கடை தோண்டப்படுவதால் வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சென்னை மாநகராட்சி, 147வது வட்டத்திற்கு உட்பட்டது பல்லவன் நகர். ஆலப்பாக்கம் சாலையையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் வகையில் பல்லவன் நகர்  முதல் பிரதான சாலை உள்ளது. இந்தச்  சாலையில் ஒரு பகுதியில் குடியிருப்புகளும், மறுபுறத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பூங்கா என அடுத்தடுத்து உள்ளன. இந்தச் சாலையில், மழைநீர்க் கால்வாய்,   கழிவு குழாய், குடிநீர் குழாய் ஆகியவை அருகருகே செல்கின்றன. ஒரு இடத்தில் குடிநீர் குழாயும், கழிவு நீர்க்குழாயும் ஒன்றன்  மேல் ஒன்றாக செல்கிறது. இந்த இடத்தில் குடிநீர் குழாய் அல்லது கழிவு நீர்க்குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், மண் ஊறி சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. அதை சரி செய்ய அவ்வப்போது பள்ளம் தோண்டுகின்றனர். இதனால் சாலை மூடப் படுகிறது அல்லது குறுகலாக மாற்றப்படு கிறது. இதன்காரணாக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வாகனஓட்டிகள், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அண்மை யில் குடிநீர், கழிவு நீர்க்கால்வாய் உடைப்புகள் சரி செய்யப்பட்டு, சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும்  மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே  மாதத்தில் 3 முறை  பள்ளம் தோண்டி பணி களை செய்தனர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.