சென்னை எண்ணூர்- தூத்துக்குடி வரையிலான இயற்கை எரிவாயு குழாய் பதிப்புப் பணிகளுக்காக மதுரை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் கணிசமான பகுதி பெரியாறு- வைகை பாசன இருபோக நிலங்கள். விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து புஞ்சை நிலங்களை, அரசு புறம் போக்கு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தியிருக்கலாம்.
மதுரை கிழக்கு வட்டம் அயிலாங்குடி வருவாய் கிராமத்தில் குழாய் பதிப்பு பணிக் காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் இருபோக நஞ்சை நிலங்களே. இந்த நிலங் களை எடுக்கும் போது நாட்டின் வளர்ச்சி பற்றி மனதில் கொள்வதைப் போல் அந்த நிலங்களை பயிரிடும் விவசாயிகளின் நலன்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டாமா? முதலில் நிலங்களை எடுக்கும் போது நில உரிமையாளர்களின் ஒப்புதல் அவசி யம். அதற்கும் முன்னதாக இந்த திட்டத்தி னால் ஏற்படும் சமூகத் தாக்கம் பற்றிய ஆய்வு அதைவிட முக்கியம். அத்துடன் அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டிய நியாயமான செயல்பாடு. இங்கு இந்த நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பழைய நடைமுறையான தண் டோரா போடும் முறை இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வருவாய் கிராம அலுவலக ஊழியர் மூலம் நேரடி யாக கையெழுத்துப் பெற்றிருக்க வேண் டும். சம்பந்தமே இல்லாத யார் யாரிடமோ கையொப்பம் பெற்றுவிட்டு (பெயருக்காக) தகவல் கொடுக்கப்பட்டு விட்டது என்று ஆவ ணம் தயார் செய்ய துவங்கியதிலிருந்தே முதல் கோணல் ஆரம்பமானது. அடுத்தக்கட்டமாக நிலங்களின் உரிமை யாளர்களுக்கு- விவசாயிகளுக்கு - இழப் பீட்டு தொகை வழங்குவதற்கு அவரது நிர்வாகம் நிர்ணயம் செய்ய கடைப்பிடித்த அளவுகோல்.
இதற்கு மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தெளஸ் பாத்திமா செய்த பரிந்துரையை ஆட்சியர் அனீஷ் சேகர் அப்படியே ஏற்றுக்கொண்டு நில எடுப்பு துணை ஆட்சியருக்கு ஆணையாக அனுப்பி வைத்துவிட்டார். அதில் கோட் டாட்சியரின் பரிந்துரை இழப்பீடு நிர்ணயம் மிகவும் பாரபட்சமாக அமைந்துள்ளது என் பது விவசாயிகளின் கருத்து. அதனால்தான் அவர்கள் அந்த இழப்பீட்டை வாங்கு வதற்கு தயங்கினார்கள். நியாயமான, பார பட்சமற்ற இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரினார்கள். அதற்கு, இப்போது தரப்படும் இழப் பீட்டை பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சி யரிடம் மேல்முறையீடு செய்யுங்கள் என்று திட்ட செயல் பாட்டார்களான - இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போதும் சிலர் இழப்பீட்டை பெறவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 57 சர்வே எண்களில் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளது. இதில் 15 சர்வே எண் களுக்கு மட்டும் சதுர அடி கணக்கில் இழப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது - நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ஒரே வருவாய் கிரா மத்தில் அருகருகே உள்ள நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யும் போது இரண்டு விதமான அணுகுமுறை யை கடைப்பிடிப்பது நியாயமல்லவே. அதில் பத்து மடங்கு வித்தியாசம் இருப்பது அநீதியல்லவா? இது ஏன் எனக் கேட்டால், அவர்கள் சதுர அடி கணக்கில் மதிப்பிட்டு தங்கள் நிலத்தை பதிவு செய்திருக்கிறார்கள் என்று கோட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை பதில் சொல்லப்படுகிறது. ஒரு நிலத்தை தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக உழவு செய்து வாழ்க்கை நடத்தி வருபவர்கள் சதுர அடிக் கணக்கில் தங்கள் நிலத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வைக்க மாட்டார்கள். தன்னால் குடும்ப கஷ்டம் தாங்காமல் விற்கும் விவ சாயியிடமிருந்து நிலத்தை வாங்கும் மற்றொரு விவசாயியும் கூட சதுர அடி கணக்கில் நிலத்தை பதிவு செய்திட மாட்டார். பின் யார் செய்வது? விளை நிலங்களை விலை கொடுத்து வாங்கி ரியல் எஸ்டேட் - வீட்டுமனை வியாபாரம் செய்பவர்கள் மட்டுமே சதுர அடி கணக்கில் நிலத்துக்கு மதிப்பு கொடுத்து பதிவு செய்வார்கள்.
ஏனெனில் அவர்கள் செய்வது வியாபாரம், விவசாயம் அல்ல. அதனால் தொழிலில் லாபம் பெற இத்தகைய வேலை செய்யப் படுவது வருவாய்த்துறைக்கும் ஆட்சி நிர்வா கத்திற்கும் தெரியாதது அல்ல. அப்படியே ஒரு நிலம் சதுர அடிக் கணக்கில் மதிப்பிடப்படும் போது அதனரு கில் இருக்கும் அடுத்த வயலுக்கு, அடுத்த டுத்த வயலுக்கு இந்த நில மதிப்பு பொருந் தாதா? சதுர அடி கணக்கில் பதிவு செய்யப் பட்ட மதிப்பு கூட்டப்பட்ட நிலத்துக்கு கொடுக் கப்படும் இழப்பீடு, ஒரு வரப்பு தாண்டி னால் தனது மதிப்பை இழந்துவிடுமா? இது எந்த ஊர் நியாயம்? ஒரு விவசாயி பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருவது குற்றமா? தண்டனைக்குரியதா? இந்த கருத் தோட்டம் ஆட்சியாளர்களுக்கு இருக்க லாமா? நவீன தாராளமயக் கொள்கை நாட்டில் கோலோச்சும் இந்த சமயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கே சந்தையில் மதிப்பு என்று கூறப்படுவதால் நிலத்தை யும்- விவசாயம் செய்து வரும் விவசாயி - தானே தொடர்ந்து விவசாயம் செய்து வந்தா லும் சதுர அடி கணக்கில் விலை மதிப்பு போட்டு பதிந்து வைக்க எங்கே போவார் கள்? கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தால் அவர் ஆட்சியரிடம் கை காட்டு கிறார். மாவட்ட ஆட்சியரிடம் சென்றால் அவர் கூடுதல் விலைக்கு அருகில் உள்ள நிலத்தை விற்றதற்கு ஆதாரங்கள் இருந் தால் கொண்டு வாருங்கள் என்கிறார். சரி என, ஆதாரங்கள், ஆவணங்களைக் கொடுத்தால் அமைதியாய் இருக்கிறார். அடுத்ததாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் நியாயம் கேட்டால், நில எடுப்பு துணை ஆட்சியரிடம் மனுக்களை அனுப்பி வைக்கிறார். அவரோ நீங்கள் உரிய நீதி மன்றத்தை நாடுங்கள் என்று பதில் அனுப்பு கிறார். இதன் பொருள் என்ன? ஏற்கெனவே நிர்ணயித்த இழப்பீடு தான் சரியென்று மாவட்ட ஆட்சியர் சொல்வ தாகத்தானே பொருள் கொள்ள முடியும்.