சென்னை, டிச. 7 - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் புகார் அளித்தனர். அம்பேத்கரின் நினைவு தினம் செவ்வாயன்று (டிச 6) அணுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இந்து மக்கள் கட்சியினர் ஒட்டி இருந்த சுவரொட்டிகளில், அம்பேத்கருக்கு காவி உடையணிவித்து, நெற்றி யில் பட்டை போட்டு, காவி தலைவன் என அச்சிட்டு தமிழகத்தின் சில இடங்க ளில் ஒட்டி இருந்தனர். தனது வாழ்நாள் முழு வதும் சனாதனத்தை எதிர்த்து போராடியவரை அவமதிக்கும் வகையில் இந்த சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது. இத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அந்த கட்சியினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் கோரி உள்ளது. இதனை வலி யுறுத்தி புதனன்று (டிச.7) நேரு விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலை வர் த.சித்தார்த்தன், பொரு ளாளர் பார்த்திபன், சென்னை மாநகராட்சி 98வது வார்டு கவுன்சிலர் ஏ.பிரியதர்ஷிணி ஆகியோர் காவல் ஆணையர் அலுவல கத்தில் புகார் அளித்தனர்.