சிதம்பரம், ஏப். 11- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொறியியல் மாண வர்களுக்கு முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித் தொகை கடந்த மூன்று ஆண்டு களாக வழங்காததை கண்டித்தும், பிற அரசு பொறியியல் கல்லூரியில் வசூ லிக்கும் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது வரும் 30ஆம் தேதிக்குள் கல்வி உதவித் தொகை வழங்குவதாக உறுதி அளித்தது. பிறகு, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செம்மலர், செயலாளர் குமாரவேல் ஆகியோர் கூறுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு பல்கலைகழகமாக மாறிய பின்பும் கூட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக கட்டணத்தையே நிர்வாகம் வசூலிக்கிறது” என்று குற்றம் சாட்டினர்.
பிற அரசுப் பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கட்டணத்தையே இங்கும் வசூலிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டண மாக 5,500, சிறப்புக் கட்டணமாக 15,000, இதர கட்டணமாக 10,000 வசூலிக்கப்படுகிறது. சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு பல்கலைக் கழகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் கூறினர். கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உதவித்தொகை இயக்குநரிடம் கேட்டபோது உதவித் தொகையில் பாதி பணத்தை வழங்குகிறோம். மீதிப் பணத்தில் பல்கலைக்கழகத்திற்கு பெயிண்ட் அடித்து விட்டோம் என அலட்சியமாகப் பதில் அளி\த்திருக்கிறார். மாணவர்களுடைய உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்ததோடு மட்டு மல்லாமல் பணத்தை முழுமையாகக் வழங்க மாட்டோம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவதையும், மாணவர்களின் அனுமதியின்றி பணத்தை செலவழித்த பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டித்தனர்.