சென்னை, ஏப்.7 - சென்னை மாநகராட்சி யில் உள்ள 200 வார்டு மாமன்ற உறுப்பினர்க ளுக்கும் புதிதாக செல்போன் கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர்களை எளிதாக தொடர்பு கொள்ள உறுப் பினர்கள் ஒவ்வொரு வருக்கும் மாநகராட்சி செல் போன் எண் வழங்கி வருகி றது. இதன்படி தற்போது புதி தாக அமைந்துள்ள மாநக ராட்சியில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டுள் ்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத் திடம் இருந்து மொத்தமாக இந்த எண்களை மாநகாட்சி பெற்றுள்ளது. 94454 67001 எண்ணில் தொடங்கி 94454 67200 வரை வார்டு வரிசை யாக ஒரே மாதிரியான எண்கள் வழங்கப்பட் டுள்ளன. இந்த செல்போன்க ளில் முதல் 7 இலக்கங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். கடைசி 3 இலக்கங்கள் மட் டும் அந்தந்த வார்டை குறிக் கும் வகையில் இருக்கும். மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்களை கவுன்சிலர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அந்த எண்க ளில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சொல்ல முன் வருவார்கள் என்பதால் அவற்றிற்கு முக்கி யத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.