districts

img

நேரு, அம்பேத்கர் நகர மக்களுக்கு மாற்று இடம் சிதம்பரம் நகராட்சி துணை தலைவர் உறுதி

சிதம்பரம், மார். 10 - சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33ஆவது வார்டு பகுதியில் உள்ள நேரு நகர், அம்பேத்கார் நகரில்  100க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கிய பின்னரே வீடுகள் காலி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்ததுள்ளது.  கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை நீர்வழி ஆக்கிரமிப்பாளர்கள் என கூறி காலி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் வியாழக்கிழமை சிதம்பரம் நகராட்சி அலுவலர்கள் நேரு நகரில் வசிக்கும் பொதுமக்களிடம் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்குவதற்காக வந்தனர். இதனை அறிந்த சிதம்பரம் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த் துறையினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.  இந்த நிலையில் மக்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை காலி செய்யும் நடவடிக்கையை தள்ளிப்போட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து நோட்டீஸ் வழங்க வந்த அலுவலர்களை  திருப்பி அனுப்பினர்.