districts

மாதவரம் -  செங்குன்றம் பகுதி கட்டுமான சங்க பேரவை

சென்னை, ஏப். 10 - கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கட்டுமான சங்கத்தின் மாதவரம் - செங்குன்றம் பகுதி 9ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஏப்.10) புழலில் நடை பெற்றது. இதில், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு சங்கத்தின் பகுதி தலைவர் எம்.அழகேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் வி.சரவணன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஏ.ஹென்றி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.nஜயராமன், மாநிலக் குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர், சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன், செயலாளர் பி.லூர்துசாமி, பொருளாளர் எம்.மூர்த்தி, சிபிஎம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர். பகுதி தலைவராக ஜெ.பார்த்திபன், செயலாளராக வி.சரவணன், பொருளாளராக ஏ.ஹென்றி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.