districts

img

பாலிசிதாரர்கள்தான் எல்.ஐ.சி. உரிமையாளர்கள் முகவர்கள் மாநாட்டில் கே.சுவாமிநாதன் பேச்சு

சென்னை, ஜூன் 18- எல்.ஐ.சி.யின் உரிமையா ளர்கள் பாலிசிதாரர்கள்தான் என முகவர்கள் மாநாட்டில்  கே.சாமிநாதன் தெரிவித் தார். அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் கோட்டம் 2-இன் 4ஆவது மாநாடு தோழர் எஸ்.சுத்தானந்தம் நினைவரங்கில் அம்பத்தூரில் (ஜூன் 18) நடைபெற்றது. தலைவர் வி.நாகலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.கலாம் சங்க கொடியை ஏற்றினார். டி.சுரே ஷ்பாபு அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் பி.குமார் மாநாட்டை துவக்கி வைத் தார். செயலாளர் டி.கே.வெங்கடேசன் வேலை அறிக் கையையும், பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் பேசுகையில், எல்ஐசியை பாதுகாக்க, முகவர்களின் நலனை பாதுகாக்க, தேசத்தை பாதுகாக்க என மும்முனை போரட்டத்தை நடத்த வேண்டிய தேவை உள்ளது. எல்.ஐ.சி.யை அரசு விற்க முடியுமா என பொருளாதார நிபுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் எல்.ஐ.சி.யின் உரிமையாளர்கள் பாலி சிதாரர்கள்தான். இவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய அரசு பங்குகளை விற்பனை செய்வதை கை விடவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ச்சியான போராட்டங் களினால்தான் 50 விழுக்காடு பங்குகளை விற்போம் எனக் கூறியவர்கள் தற்போது 3.5 விழுக்காடு பங்குகளை மட்டும் தான்  விற்பனை செய்ய முடிந்தது என்பதை கவ னத்தில் கொள்ள வேண்டும்.  மேலும் 51 விழுக்காடு பங்கு கள் எப்போதும் அரசின் கையில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஊழியர்கள் முகவர்கள் இணைந்து கரங்களை உயர்த்தும் போதுதான் கை விலங்குகள் முறியும். எனவே இணைந்து போராடு வோம், எல்.ஐ.சி, முகவர் நலனை, தேச நலனை பாதுகாப்போம் என்றார். எல்.ஐ.சி கோட்டம் 2இன் மேலாளர் ஏ.மனோகரன், சங்கத்தின் செயல் தலைவர் ஏ.பூவலிங்கம்,  சென்னை கோட்டம் 1இன் தலைவர் எம்.ராஜேந்திரன், தனசெல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பி.ரா ஜேஷ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்ன தாக பி.எம்.அன்பழகன் வரவேற்றார். கி.தாமோதரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
முகவர்களுக்கான குழு காப்பீட்டினை 25 லட்சமாக உயர்த்த வேண்டும், அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவை வழங்க வேண்டும், முகவர் களுக்கான பணிக்கொடை தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு, கணக்கீடு முறையை மாற்ற வேண்டும், எல்.ஐ.சி. பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக வி.நாக லிங்கம், செயலாளராக டி.கே.வெங்கடேசன், பொரு ளாளராக ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.