districts

img

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் - விசிக கண்டன இயக்கம்

மோடி அரசின் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் ஆகியவற்றை கண்டித்து சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்க லம் கடைவதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.ஆற்றலரசு ஆகியோர் கலந்து கொண்டனர. விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், மரக்காணம், செஞ்சி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவகுமார், சிபிஐ செயலாளர் வெ.முத்தையன்,விசிக செயலாளர் பி.க.அம்பேத்வளவன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றி னார்,  சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி. சேகர் மற்றும் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகரம் பழைய பேருந்து நிலையம் முன்பும், குடியாத்தம் தாலுக்கா சித்தூர் கேட் பகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி ஆகியோர் உரையாற்றினர், வேலூர் வடக்கு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், வேலூர் தெற்கில் தொரப்பாடி எம்.ஜி.ஆர் சிலை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூரில் இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.