சென்னை, ஜூலை 25- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோர் அமைப்பு துவக்க விழா மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. நசிந்து வரும் தொழில் வணிகத்தை வளப்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் சுரண்டப்படும் தமிழகத்தின் வளத்தை பாதுகாக்கவும், அகில இந்திய அளவில் தமிழகத்தை தொழில் வணிகத்தில் முன்னோடி மாநிலமாக மாற்றி அமைத்திடவும், தற்போது இளம் தலைமுறையினரிடம் நிலவி வரும் சுயதொழில் சார்ந்த சிந்தனைச் சிதைவை மாற்றி அமைத்திடவும், முன்னோர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரம்பரிய வணிகத்தினை இளம் சமுதாயத்தினரை ஊக்கப்படுத்தி, வணிகத்தில் பங்கேற்க செய்திடவும், பொருளாதார வளர்ச்சியில் தமிழ கத்தை முன்னோடி மாநிலமாக நிலை நிறுத்திடவும், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் சார்பில், இளைய சமுதாய வணிக சிந்தனையுள்ள தொழில் முனைவோர்களை ஒருங் கிணைத்து, புதியதோர் உத்தியோடு இளம் தொழில் முனைவோர் அமைப்பு என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, வளர்ந்து வரும் இந்திய தேசத்தை வலிமை மிக்க தேசமாக மாற்றிட வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை தொடங்குவதன் மூலம் லட்சக்கணக் கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் பெருகும் என ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். மேலும் இளம் தலைமுறையினரால் துவக்கப்பட்டுள்ள அமைப்புக்கு சட்ட வழிகாட்டுதல்கள், உரிம அனுமதிகள், எளிதில் நிதி ஆதாரங்கள், பிணை யில்லாத வங்கிக் கடன்கள், போன்ற அனைத்தையும் முன்னுரிமை அடிப் படையில் இளம் தொழில் முனை வோர் அமைப்புக்கு வழங்கி, நசிந்து வரும் வணிகத்தையும், தொழிலையும் கட்டிக்காக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதில் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.