சென்னை, ஜூலை 7 - ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொள்ளும் இதய நோயாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் வகையில் எக்ஸைமர் லேசர் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. சென்னை அப்பல்லோ பிரதான மருத்துவமனையின் இதயநோய் நிபுணர்கள் டாக்டர். கே. தாமோதரன் மற்றும் அவரது குழுவினர் இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பாதிக்கப்பட்ட 53 வயதுப் பெண்ணுக்கு முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தை கொண்டு கரோனரி ஆஞ்சி யோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர். கடந்த காலங்க ளில் அவருக்கு பல ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டவர். தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்து வமனைக்கு வந்த அவரை பரி சோதித்து பார்த்ததில் இதயத் திற்கு செல்லும் ரத்தநாளம் ஒன்றில் 100மிமீ நீளத்திற்கு அடைப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதிய லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு எளிதாக சிகிச்சைய ளித்து அடைப்பை மருத்துவர்கள் நீக்கினர். புதிய வகையிலான சிகிச்சை யின்போது லேசர் ஊடுருவலின் ஆழம் 50 மைக்ரான்கள் மட்டுமே (ஒரு மனித முடியின் அகலம்) எனவே இதயத்திற்கு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப் பை நீக்க பயன்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பாது காப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.