districts

சேலையூர் பாரத்நகர் மக்களுக்கு பட்டா?

சென்னை, பிப்.4- 1990களில் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையோரம் வசித்த சுமார் 300 குடும்பங்களை சேலை யூர் கிராமம், பாரத் நகரில் அதிகாரிகள் மறு குடியமர்வு செய்தனர்.  அப்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், ஒரு குடும்பத்திடம் இருந்து 220 ரூபாய் பெற்றுக் கொண்டது. மேலும், 20 வருடங்களுக்கு மாதத் தவணையாக 22 ரூபாய் செலுத்தும் வகையில் ஒதுக்கீடு கொடுத்தது. தாம்பரம் மாநகராட்சியின் 68வது வட்டத்தில் வரும் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி, 2022ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “குடியிருக்கும் மனையை கிரயம் செய்து கொள்ள, 1993 முதல் அங்குள்ள மக்கள் கிரயத் தொகையை மாதத் தவணையாக செலுத்தி வந்துள்ளனர். இத்திட்டத்தை வாரியம் முழுமையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தற்போது, இங்கு வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாது காக்க பயனாளிகளுக்கு கிரைய பத்திரம் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்து. இதன் தொடர்ச்சியாக, பாரத் நகர் மக்க ளுக்கு பட்டா வழங்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜன.27ந் தேதி வாரிய அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து இடத்தை அளவீடு செய்துள்ளனர்.
மாடம்பாக்கம் ஏரி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் ஏரி சுமார் 259 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் 3 மதகுகள் மற்றும் 4 கலிங்கல் உள்ளது. இந்த ஏரியின் பெரும்பகுதி குடி யிருப்புகளாக மாறிவிட்டது. மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக ஏரி பரா மரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி புனரமைக்க அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழுவினரும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஏரி பிரச்சனை தொடர்பாகவும், அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் க.செல்வகுமார், சிபிஎம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல் பணிகளுக்காக, ஏரிகள் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு (6 கோடி ரூபாய்) தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாடம் பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.