சென்னை,அக்.22- உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடியபசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். மேலும், பட்டாசு குப்பைகளை மற்ற எந்தக் குப்பைகளுடன் கலக்காமல் தினந்தோறும் வகைப்படுத்திய குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மைப்பணி யாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் பட்டாசு குப்பைகள்தனியாக சேகரிக்கப் பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளைமுறைப் படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு அனுப்புவதற்குஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
பொதுமக்கள் தவிர்க்க வேண்டியவை :
பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி களைத்தவிர்க்க வேண்டும். மருத்துவமனை கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்க ளில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னை மாநகராட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.