districts

img

சட்டத்திற்கு புறம்பாக தேர்தல்: சாலையோர வியாபாரிகள் போராட்ட அறிவிப்பு

சென்னை, ஏப். 9 - அடையாள அட்டை வழங்கா மல், சட்டத்திற்கு புறம்பாக நகர விற்பனைக்குழு  (வெண்டிங் கமிட்டி)  தேர்தலை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. இதற்கு பல்வேறு வியாபாரி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை நகரில் சாலை யோர வியாபாரிகளை கணக் கெடுத்து அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், நகர விற்ப னைக்குழுவிற்கான தேர்தலை மாந கராட்சி அறிவித்துள்ளது. இதனால் உண்மையான வியாபாரிகள் தேர்தலில் போட்டியிட, வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வியா பாரிகளை முறையாக கணக் கெடுக்க வேண்டும். அதன்படி அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்க வேண்டும். அடை யாள அட்டை பெற்றவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும். அதன் பிறகே நகர விற்பனைக்குழு தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை நகர சிறுகடை வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக மாநகராட்சி ஆணை யரிடம் மனு அளித்து பேசியது.  தமிழ்நாடு முதலமைச்சரிடமும் முறையீடு செய்துள்ளது. இதனையடுத்து, வியாபாரி சங்கங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை சனிக்கிழமையன்று (ஏப்.8) மாநகராட்சி கூட்டியது. துணை ஆணையர் விஷ்ணு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வியாபாரி சங்கங்களின் பிரதிநிதி கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், சென்னை நகர வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பின் கருத்தையே, பிற வியாபாரி சங்கங்களும் வலி யுறுத்தின. இதனை துணை ஆணை யர் ஏற்க மறுத்து, ஏற்கனவே அறி விக்கப்பட்டபடி 17 ம் தேதி தேர்தல் நடக்கும். அதற்கு முன்பாக கணக் கெடுக்கப்பட்டவர்களுக்கு அடை யாள அட்டை வழங்கப்படும் என்றார். இதனை வியாபாரிகள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். தமிழ்நாடு அரசு உருவாக்கி யுள்ள சாலையோர வியாபாரிகள், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப் படுத்துதல்) செயல் திட்டம் மற்றும் விதிகள் 2015ல் குறிப்பிட்டுள்ளபடி, தேர்தல் நடவடிக்கைகள் துவங்கு வதற்கு குறைந்த பட்சம் 10 நாட்க ளுக்கு முன்பு (வியாபாரிகள்) வாக்காளர் விவரங்களை வெளி யிட வேண்டும். இந்த விதி மீறப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். அடையாள அட்டை வழங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதன்பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை நகர சிறுகடை வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சி.திரு வேட்டை, பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் வலியுறுத்தினர். அதையும் துணை ஆணையர் ஏற்க மறுத்து விட்டார். வியாபாரி சங்கங்களின் பிரதி நிதிகளின் கருத்தை ஏற்காமல், துணை ஆணையரின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து ஏப்.11 அன்று ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக சென்னை நகர வியாபாரி சங்கங்க ளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.