சிதம்பரம், ஜன. 28- விவசாய நிலத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை வடக்கு, தெற்கு, நஞ்ச மகத்து வாழ்க்கை, சிங்கார குப்பம், தைக்கால் உள்ளிட்ட கிராம வயல்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பு நீர் புகுந்து விடுகிறது. இதனால், விவசாய சாகு படி செய்ய முடியாமல் அவதிப்படு கிறார்கள். உப்பு நீர் புகுவதால் மணிலா மற்றும் நெல் பாசனத்திற்கு நீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளது விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் வாஞ்சிநாதன், கற்பனைச்செல்வம், ஜீவா, ஆழ்வார் ஆகியோர் சிதம்ப ரம் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் காந்தரூபனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், உப்பு நீர் உட்பு காதவாறு தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்க வேண்டும். நீர் புகாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.