சென்னை, ஏப். 8 - சொத்துவரியை அடுத்து காலிமனைக்கான வரியும் 100 விழுக்காடு உயர்த்தப் பட்டுள்ளது. சொத்து வரிக் கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்கு நர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொத்துவரி சீராய்வு பணிகள் முடித்து வழக்கமான முறையில் வரிவிதிப்புகள் செய்திட 3 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை கட்டிட அனுமதி கோரி விண்ணப்பம் செய்ப வர்களின் நலனை கருதியும், நகராட்சி மற்றும் மாநகராட்சி களின் வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் கீழ்காணும் நடைமுறை களை பின்பற்ற வேண்டும். அதன்படி, காலிமனை வரிவிதிப்பை பொறுத் தவரை 100 விழுக்காடு உயர்த்தி அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. எனவே, சொத்துவரி சீராய்வு நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை புதிதாக பெறப்படும் காலிமனை வரிவிதிக்க கோரும் விண்ண ப்பங்களை உரிய விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது / வைப்பு ரசீது தற்காலிகமாக வழங்கலாம். சீராய்வு பணிகள் முடிவுற்றவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்தல் வேண்டும். அவ்வாறு கணக் கீடு செய்த வரிவிதிப்பு கேட்பு தொகையினை ஏற்கெனவே பல்வகை / வைப்புத் தொகை யாக வசூலிக்கப்பட்ட தொகையினை ஈடு செய்து கொள்ள வேண்டும். கட்டிட விண்ணப்ப நடை முறை தடையின்றி செயல்பட மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்ய அலுவலக கணினி செய்ய வேண்டும். சொத்து வரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.