சென்னை, மார்ச். 20- தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வது புதனன்று (ஏப்.20) தொடங்கி யது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இல வசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இல வசமாக சேரும் மாணவர் கள் 8-ம் வகுப்பு வரை கட்ட ணம் செலுத்த தேவை யில்லை. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி யது. மே 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. பள்ளிக் கல்வியின் இணையதள மான rte.tnschools.gov.in மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இலவச மாக மாணவர் சேர்க்கை பெற லாம். இந்த திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்கள் மற்றும் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டவர்கள், மூன்றாம் பாலி னத்தவர், மாற்றுத்திறனாளி களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங் கள் குலுக்கல் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
நலிந்த பிரிவினருக்கு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ண ப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாண வர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை நடைபெறும். இதில் தேர்வுசெய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கபப்ட்ட மாண வர்களின் விவரங்களை பள்ளிகள் மே 21-ந்தேதிக் குள் தெரிவிக்க வேண்டும். ஒரு பள்ளியில் சேர அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் மே 23-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வுசெய்ய வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29-ந்தேதிக் குள் மாவட்ட கல்வி அலுவ லகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.