districts

img

முதுகெலும்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மக்கள் வழங்கிய நிதியால் சிகிச்சை

சென்னை, ஜூன் 21-  ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி செல்வி.  சிறு வயதில் முதுகு  தண்டில் ஏற்பட்ட வளைவா னது நாளாக நாளாக அதிகரித் துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் மற்ற வர்களைப் போல் அவ ளால் இயல்பாக திரும்பிப் பார்க்கவோ நிமிரவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சிறு மியை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, சேத்துப்பட் டில் உள்ள டாக்டர் மேத்தா  மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் தலைமையிலான மருத்து வர்கள் குழு பரி சோதித்தது. சிறுமியை இதில் ஸ்கோலியோ சிஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவித நோய் ஆகும். இதன் காரணமாக முதுகு தண்டு வளைந்த நிலையில் அவளது வளர்ச்சி க்கு தடையாக இருந்தது. இந்த நிலையில் இதற்கு முறையான சிகிச்சை அளி க்காவிட்டால் முதுகெலும்பு மேலும் வளைந்து, முதுகு தண்டுவடத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, அது பக்கவாதத்திற்கு வழிவகை செய்துவிடும்.  அந்தச் சிறுமி சிறு வயதிலேயே தனது தாயை இழந்துவிட்ட நிலை யில் அவளது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். மேலும் குடும்பம் பொருளாதார ரீதி யாகவும் மிகவும் சிரமப்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு தேவையான முழு நிதியை பொது மக்களிடமிருந்து பெறு வதற்கு மேத்தா மருத்துவ மனை ஏற்பாடுசெய்தது. அதனைத் தொடர்ந்து மருத்து வர்கள் நியூரோ மோனிட்டரிங் கருவியைப் பயன்படுத்தி வளைந்த முதுகுதண்டை நேராக்கினர் 5 மணி நேரம் இந்த சிகிச்சை நீடித்ததாக  மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரும் எலும்பி யல் துறைத் தலைவருமான டாக்டர் பார்த்தசாரதி ஸ்ரீனிவா சன் கூறினார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கண்ணன் கூறுகை யில், முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்கு, முதலில் அது குறித்து கண்டறிந்து அதற்கான சிகிச்சையை ஆரம்ப நிலையிலேயே மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது அதிக அளவில் முதுகுத் தண்டு வளைவு ஏற்படாமல் இருக்கும் என்றார்.