districts

img

பூங்காவில் விழுந்து கிடந்த மின் கம்பம்

வந்தவாசி,ஜூன் 5- வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்கா வில் வந்தவாசி மற்றும் பல்வேறு பகுதி களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறு வர்கள் விளையாடுவதற்கு நடைபயிற்சி செய்வதற்கும் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.   இந்தநிலையில் பூங்காவில் நடைபாதை யில் மின் கம்பம் ஒன்று விளக்கு எரிந்த படி கடந்த ஒரு வாரமாக கீழே விழுந்து கிடக்கிறது. நடைபாதை வழியாக பொதுமக்கள் கீழே விழுந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை கடந்து செல்கின்றனர். இத னால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.